பதிவு செய்த நாள்
26 மார்2014
10:30
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(மார்ச் 26ம் தேதி) மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தேசிய பங்குசந்தையான நிப்டி முதன்முறையாக 6600 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 107.31 புள்ளிகள் உயர்ந்து 22,162.52-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 33.05 புள்ளிகள் உயர்ந்து 6,622.80 புள்ளிகளிலும் வர்த்தகமாகி கொண்டு இருந்தது.
அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவது, உலோகம், வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்துள்ளது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் உயர்வு காணப்படுகிறது. இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து, ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.68 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.76 சதவீதமும் உயர்ந்து உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|