பதிவு செய்த நாள்
26 மார்2014
17:17
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இன்று(மார்ச் 26ம் தேதி), சென்செக்ஸ், நிப்டி இரண்டுமே புதிய உச்சத்தை தொட்டன. முதன்முறையாக நிப்டி 6,600 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்திலேயே நிப்டி இந்த சாதனையை படைத்தது. அதேப்போல் சென்செக்ஸ்ம் 22,172 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தது. அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், முக்கிய நிறுவன பங்குகளின் விலை உயர்ந்ததாலும் இந்திய பங்குசந்தைகளில் எழுச்சி காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 40 புள்ளிகள் உயர்ந்து 22,095.30 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 11.65 புள்ளிகள் உயர்ந்து 6,601.40 புள்ளிகளிலும் முடிந்தன. முன்னதாக வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 22,172.20 புள்ளிகள் வரையும், நிப்டி 6,627.45 புள்ளிகள் வரையும் சென்றன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 16 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக எல்அண்ட்டி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் விலை அதிக லாபமும், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் மிதமான லாபமும் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|