பதிவு செய்த நாள்
01 ஏப்2014
11:41
மும்பை : ரிசர்வ் வங்கி 2014-15ம் ஆண்டுக்கான கடன் வெளியீட்டு கொள்கையை இன்று(ஏப்ரல் 1ம் தேதி) வெளியிட்டது. அதில் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஏற்கனவே தற்போது நடைமுறையில் இருந்து வரும் 8 சதவீதமே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் சி.ஆர்.ஆர். எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதத்திலும் மாற்றமின்றி 4 சதவீதமே இருக்கும் என தெரிவித்துள்ளது.
2014-15 ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதம் இருக்கும் என்றும், நடப்பு கணக்கு பற்றாக்குறை 2 சதவீதமாக குறையும் என்றும், பணவீக்கம் 6 சதவீதத்திற்குள் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
புதிய வங்கிகள் துவங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசித்த பின்னர் தெரிவிக்கப்படும் என்றும், வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பணத்தை, அவர்களது வங்கி கணக்கில் வைத்திருக்கவில்லை என்றாலோ அல்லது வங்கி கணக்கை இயக்காமல் இருந்தாலோ அதற்காக அபராதம் விதிக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|