பதிவு செய்த நாள்
01 ஏப்2014
17:19
மும்பை : கடந்த 6 நாட்களாக இந்திய பங்குசந்தைகள் தினம் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வந்தன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி இன்று கடன் வெளியீட்டு கொள்கையை வெளியிட்டது. அதில், வங்கி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை, இதனால் தொடர்ந்து 7வது நாளாக இந்திய பங்குசந்தைகள் உச்சத்தில் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவின் போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 60.17 புள்ளிகள் உயர்ந்து 22,446.44-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 16.85 புள்ளிகள் உயர்ந்து 6,721.05-ஆகவும் முடிந்தன. வர்த்தகத்தின் போது நிப்டி அதிகபட்சமாக 6,732.25 புள்ளிகள் வரை சென்றது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 14 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், சன்பார்மா பங்குகள் விலை மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 1.25 சதவீதம் உயர்ந்தன. இதுதவிர விப்ரோ, டிசிஎஸ்., இன்போசிஸ் உள்ளிட்ட தகவல்தொழில்நுட்ப பங்குகள் விலையும் நன்கு உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|