பதிவு செய்த நாள்
02 ஏப்2014
10:28

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து எட்டாவது நாளாக புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இன்றைய (ஏப்ரல் 2ம் தேதி, புதன்கிழமை) வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 130.06 புள்ளிகள் உயர்ந்து 22,576.50-ஆகவும் தேசிய பங்குசந்தையான நிப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 6,740.05-ஆகவும் இருந்தது.
வங்கி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாதது, ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் உயர்வு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.15 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.48 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|