பதிவு செய்த நாள்
02 ஏப்2014
17:20
மும்பை : கடந்த ஒருவாரமாக உச்சத்தை தொட்டு வரும் இந்திய பங்குசந்தைகள் இன்றும்(ஏப்ரல் 2ம் தேதி) ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளன. தொடர்ந்து அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக பங்குசந்தைகள் உயர்ந்து கொண்டே வருகின்றன. குறிப்பாக எண்ணெய் மற்றும் வங்கி தொடர்பான பங்குகள் விலை உயர்ந்ததால் பங்குசந்தைகள் இன்றும் புதிய உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 105.05 புள்ளிகள் உயர்ந்து 22,551.49-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 31.50 புள்ளிகள் உயர்ந்து 6,752.55-ஆகவும் உயர்ந்தன. முன்னதாக வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக சென்செக்ஸ் 22,592 புள்ளிகள் வரையிலும், நிப்டி 6,763.50 புள்ளிகள் வரையிலும் சென்றன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 19 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 11 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை 1.68 சதவீதமும், ஐசிஐசிஐ., பங்குகள் விலை 1.53 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் விலை 2.62 சதவீதமும் உயர்ந்து இருந்தன. இவைகள் தவிர்த்து எல்அண்ட்டி., எஸ்.பி.ஐ., எச்டிஎப்சி போன்ற நிறுவன பங்குகள் விலையும் நல்ல ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|