தங்கம் விலை அதிரடியாக ரூ.216 உயர்வுதங்கம் விலை அதிரடியாக ரூ.216 உயர்வு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.08 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.08 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கிக்கு தனியார் வங்கிகள் எதிர்ப்பு : சேவை கட்டணம் வசூலிக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2014
14:48

"வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லை என்பதற்காக, வங்கிகள் அபராத கட்டணம் வசூலிக்கக் கூடாது' என, நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது, தனியார் வங்கிகள் மத்தியில், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அபராதத்தை கைவிடும் பட்சத்தில், இதர வங்கிச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.
இது குறித்து எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்ய பூரி கூறியதாவது: வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில், குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் இருந்தால், வங்கிக்கு, 400 ரூபாய் வருவாய் கிடைக்கும். இதன் மூலம் தான், வாடிக்கையாளருக்கு வங்கி கணக்கு பரிவர்த்தனை அறிக்கை, ஓராண்டிற்கான காசோலை, ஏ.டி.எம்., பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி அபராதம் வசூலிக்காவிட்டால், மேற்கண்ட சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த நேரிடும். இது, அபராதக் கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். வங்கிகளும் லாபகரமாக இயங்க வேண்டும். ஒருவரின் கணக்கில், குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் தான், வங்கிக்கு இழப்பு ஏற்படாமல் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகள், அடிப்படை சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்பதற்காக, அபராதம் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)