பதிவு செய்த நாள்
03 ஏப்2014
17:15

மும்பை : தொடர்ந்து ஒருவாரகாலமாக உச்சத்தை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கி உச்சத்தை தொட்டன. இருப்பினும் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் ஒருவாரம் உயர்ந்து வந்த பங்குசந்தைகள் சரிந்தன. இதனால் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 42.42 புள்ளிகள் சரிந்து 22,509.07-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 16.45 புள்ளிகள் சரிந்து 6,736.10-ஆகவும் சரிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 13 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ., ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ., எச்டிஎப்சி., பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தன. இருப்பினும் இன்போசிஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி உள்ளிட்ட சில பங்குகள் உயர்வுடன் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|