பதிவு செய்த நாள்
09 ஏப்2014
14:56
வாஷிங்டன் : 2014-15-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக உயரும் என பன்னாட்டு நிதி அமைப்பான ஐ.எம்.எப் கணித்துள்ளது. இதுகுறித்து ஐஎம்எப் மேலும் கூறியிருப்பதாவது, 2013-14ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.4 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் 2014-15ம் ஆண்டில் 5.4 சதவீதமாக உயரும். சர்வதேச பொருளாதார சூழல்கள் சாதகமாக மாறி வருவது, இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து வருவது, நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தது, சமீபத்தில் முக்கிய தொழில் துவங்குவதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதது போன்ற காரணங்களால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உயரும் என ஐஎம்எப்., தெரிவித்துள்ளது. மேலும் 2015ல் வளர்ச்சி 6.4 சதவீதமாக உயரும் என்றும் கூறியுள்ளது. அதேசமயம், தற்போது சில்லரை வர்த்தக பணவீக்கம் கவலை அளிக்கும் விதமாக இருந்தாலும், விரைவில் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனவும் ஐஎம்எப்., கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|