தங்கம் விலை ரூ.24 உயர்வுதங்கம் விலை ரூ.24 உயர்வு ... நாட்டின் ஏற்றுமதி 312.35 பில்லியன் டாலராக உயர்வு நாட்டின் ஏற்றுமதி 312.35 பில்லியன் டாலராக உயர்வு ...
"இந்தியாவில் வர்த்தகம் கடினம்' - உலக வங்கி தலைவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2014
13:44

வாஷிங்டன்: "இந்தியாவில் வர்த்தகம் புரிவது கடினம்' என, தனியார் துறையினர் கருதுவதாக, உலக வங்கி தலைவர், ஜிம் யாங் கிங் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில், இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியா, ஏராளமான கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக, அரசின் வரன்முறைகள் ஊகிக்க முடியாத அளவிற்கு உள்ளன. இதன் காரணமாக, அங்கு வர்த்தகம் புரிவது கடினம் என்ற கருத்து, தனியார் துறையினருக்கு உள்ளது. இத்தகைய கருத்தை மாற்றும் நோக்கில், சிறப்பான சூழலை உருவாக்கி, வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இது, இந்திய அரசுக்கு, குறிப்பாக அதன் தலைமைக்கு மிக நன்றாக தெரியும். அதனால், அவர்கள் நிலைமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி கவர்னர், ரகுராம் ராஜன் ஏற்கனவே சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவை பயனளிக்கும் என, கருதுகிறேன்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கும், எதை செய்ய வேண்டும் என்பது குறித்து நன்றாகவே தெரியும். அரசின் கட்டுப்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொண்டால், தனியார் துறை வளர்ச்சி காணும். இந்தியா, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கல்வித் துறையை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஆரோக்கிய பராமரிப்பு துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இத்துறைகள் மட்டுமின்றி, வர்த்தக சூழலையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)