பதிவு செய்த நாள்
11 ஏப்2014
16:49
மும்பை : வாரத்தின் கடைசி நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை அதிகளவு விற்பனை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவின் போது, மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 86.37 புள்ளிகள் சரிந்து 22,629.96-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 20.10 புள்ளிகள் சரிந்து 6,776.30-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 11 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக எஸ்பிஐ., மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல்அண்ட்டி., பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், எச்டிஎப்சி., கெயில் இந்தியா, ஐசிஐசிஐ., போன்ற நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|