பதிவு செய்த நாள்
22 ஏப்2014
10:33
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(ஏப்ரல் 22ம் தேதி) புதிய உச்சத்துடன் துவங்கியுள்ளன. நேற்று வரலாறு காணாத அளவுக்கு சென்செக்ஸ் 22,764.83 புள்ளிகளுடனும், நிப்டி 6,817.65 புள்ளிகளுடனும் முடிவடைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15), மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 47.53 புள்ளிகள் உயர்ந்து 22,812.36-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 9.55 புள்ளிகள் உயர்ந்து 6,827.20-ஆகவும் இருந்தன.
பல்வேறு நிதி நிறுவனங்கள் தங்களது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. இதில் அந்த நிறுவனங்களின் லாபம் உயர்ந்து இருப்பதால், அதுசம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து வருவதாலும், அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவதாலும் இந்திய பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|