பதிவு செய்த நாள்
25 ஏப்2014
00:44
புதுடில்லி:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், நாடு தழுவிய அளவில், 1 லட்சம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், 97,500 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாண்டில், 96,700 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.நடப்பு நிதியாண்டிற்கான, மின் உற்பத்தி இலக்கில், 85,900 கோடி யூனிட் மின்சாரம், அனல் மின் நிலையங்கள் வாயிலாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், 25,200 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|