60க்கு மேல் அரசு பணி கிடைத்தாலும்தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம்60க்கு மேல் அரசு பணி கிடைத்தாலும்தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம் ... சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு ...
விலை உயர்வால் தேங்காய் ஏற்றுமதி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
01:42

கொச்சி:கடந்த ஓராண்டாக, நாட்டின் நான்கு தென்மாநிலங்களில், தேங்காய் உற்பத்தி குறைந்து போயுள்ளது. இதனால், தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. இது, ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வளைகுடா நாடுகள்:கடந்தாண்டு, ஒரு கிலோ தேங்காய் விலை, 14 - 15 ரூபாயாக இருந்தது. இது தற்போது, 32 - 38 ரூபாயாக அதிகரித்து உள்ளது.இதனால், வளைகுடா நாடுகளுக்கான தேங்காய் ஏற்றுமதி, குறைந்து போயுள்ளது என, தேங்காய் மேம்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள, இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்ய, நம்நாட்டில்இருந்து, அதிகளவில் தேங்காய் ஏற்றுமதியாகிறது.

இதுகுறித்து, முன்னணி ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:உள்நாட்டில் தேங்காய் உற்பத்தி குறைந்து, இதன் விலை அதிகரித்து வருவதால், இதன் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.நிறுவனம், முன்பு மாதத்திற்கு, 30 சரக்கு பெட்டகங்களில், தேங்காய் ஏற்றுமதியை மேற்கொண்டது. இது, தற்போது, 11 பெட்டகங்களாக சரிவடைந்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.நடப்பாண்டின், ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் தேங்காய் ஏற்றுமதி, 53,070 டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 2,224 கோடி ரூபாயாகும்.
வளர்ச்சி:கணக்கீட்டு காலத்தில், அளவின் அடிப்படையில் ஏற்றுமதி, 3 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் தேங்காய் ஏற்றுமதி, 2,058 கோடி ரூபாயாக இருந்தது என, தேங்காய் மேம்பாட்டு வாரியத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொப்பரை தேங்காய் உற்பத்தி குறை வால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதுடன், உள்நாட்டிலும், கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை மிகவும் அதிகரித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ தேங்காய் எண்ணெயின் விலை, 155 ரூபாயாகவும், ஒரு கிலோ கொப்பரையின் விலை, 110 ரூபாயாகவும் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)