வர்த்தகம் » பொது
சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஏப்2014
01:44
கடந்த 2013-14ம் நிதியாண்டில், கோக்கிங் கோல் என்று அழைக்கப்படும் சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி, முந்தைய நிதியாண்டை விட, 18 சதவீதம் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில், ஒரு டன் சிறப்பு வகை நிலக்கரியின் விலை, 111-118 டாலராக சரிவடைந்தது. இதை, சாதகமாகப் பயன்படுத்தி, இந்திய உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள், சென்ற நிதியாண்டில், 3.31 கோடி டன் சிறப்பு வகை நிலக்கரியை இறக்குமதி செய்து கொண்டுள்ளன.
இரும்பு தாதுமுந்தைய 2012-13ம் நிதியாண்டில், சர்வதேச சந்தையில், இவ்வகை நிலக்கரியின் விலை (ஒரு டன்), 140 டாலராக இருந்தது.விலை குறைந்ததையடுத்து, இவ்வகை நிலக்கரியின் இறக்குமதி அதிகரித்துள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர் இரும்புத் தாதுவை உருக்குவதற்கு, இந்த சிறப்பு வகை நிலக்கரி அதிகஅளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில், இவ்வகை நிலக்கரி யின் உற்பத்தி, தேவையில், 10 சதவீதம் அளவிற்கே உள்ளது. இதன் காரணமாகவே, உருக்குத் துறை நிறுவனங்கள், ஆண்டுக்கு, 3-3.20 கோடி டன் அளவிற்கு இவ்வகை நிலக்கரியை, ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன.கடந்த 2012 - 13ம் நிதியாண்டில், சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி, 3 கோடி டன்னுக்கும் குறைவாக இருந்தது. கடந்த நிதியாண்டில், நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி, 7.73 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த 2013ம் ஆண்டில், 5 சதவீதம் அதிகரித்து, 8.10 கோடி டன்னாக இருந்தது.தேவைஅதேசமயம், கடந்தாண்டில், நாட்டின் உருக்கு பொருட்களுக்கான தேவை, 0.6 சதவீதம் என்ற அளவிலேயே வளர்ச்சி கண்டிருந்தது.
நடப்பு நிதியாண்டில், சர்வதேச சந்தையில், ஒரு டன் சிறப்பு வகை நிலக்கரியின் விலை, 100 டாலருக்கும் கீழ் சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, உருக்கு நிறுவனங்கள், இதன் இறக்குமதியை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, எண்ணுார் கோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கணேஷ் நடராஜன் தெரிவித்தார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 26,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 26,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 26,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 26,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!