வர்த்தகம் » ஜவுளி
ஆடைகள் ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஏப்2014
01:46
புதுடில்லி:நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, சென்ற 2013-14ம் நிதியாண்டில், 15.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,494 கோடி டாலராக (89,640 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு (ஏ.இ.பி.சி.,) தெரிவித்து உள்ளது.மத்திய ஜவுளி அமைச்சகம், கடந்த நிதியாண்டில், 1,700 கோடி டாலர் மதிப்பிற்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இந்த இலக்கை எட்ட முடியவில்லை.
ரூபாய் மதிப்பு:இருப்பினும், முந்தைய 2012-13ம் நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற நிதியாண்டின் துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறையத் துவங்கியது. எனினும், நிதியாண்டு இறுதியில் ரூபாய் மதிப்பு சற்று எழுச்சி கண்டது.ரூபாய் மதிப்பில் காணப்பட்ட, மிகப் பெரிய அளவிலான ஏற்ற, இறக்கத்தை சமாளிப்பதற்கான கொள்கைகள் அறிவிக்கப்படாததால், ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாயினர்.இதன் காரணமாகவே ஆடைகள் ஏற்றுமதி இலக்கு எட்டப்படவில்லை.
சென்ற நிதியாண்டில், ஏப்., - டிச., வரையிலான மூன்று காலாண்டுகளில், ஆடைகள் ஏற்றுமதி, 16.3 சதவீதம் வளர்ச்சி கண்டது.ஆனால், நான்காம் காலாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததை அடுத்து, ஆடைகள் ஏற்றுமதி சுணக்கம் கண்டது. சென்ற நிதியாண்டின், நான்காவது காலாண்டில் (ஜன., - மார்ச்), ரூபாய் மதிப்பு, 3 சதவீதம் உயர்ந்திருந்தது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது. இதில் இருந்து, சென்ற மார்ச் நிலவரப்படி, ரூபாய் மதிப்பு 11.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, ஆடை ஏற்றுமதியாளர்களை பாதிப்புக்குள்ளாக்கியது.
அமெரிக்க பொருளாதாரம்:கடந்த 2012-13ம் நிதியாண்டில், ஆடைகள் ஏற்றுமதி, 1,295 கோடி டாலராக இருந்தது. ரூபாய் மதிப்பு உயர்வால், சென்ற ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு, ஆடைகள் ஏற்றுமதி சூடு பிடிக்கத் துவங்கியது.இதற்கு, மந்தநிலையில் இருந்து மீண்டு வரத் துவங்கிய அமெரிக்க பொருளாதாரம் துணை புரிந்தது.
சீன ஆடைகளின் விலை உயர்வும், வங்கதேச ஆடை நிறுவனங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சர்ச்சையில் சிக்கியதும், இந்திய ஆடைகள் ஏற்றுமதிக்கு சாதகமான வர்த்தக வாய்ப்பை வழங்கின. அதற்கு முன்னர், ஆடைகள் ஏற்றுமதியில், இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தின் கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வந்தன.
வங்கதேசம்:குறைந்த ஊதியம், சர்வதேச தொழிலாளர் சட்டங்கள் புறக்கணிப்பு போன்ற வற்றால், வங்கதேசம், மிகக் குறைந்த விலையில், ஆடைகளை ஏற்றுமதி செய்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, மே மாதம், வங்கதேசத்தில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை தீப்பிடித்ததில், நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அடுத்த ஆறு மாதங்களில், இதே போன்ற மற்றொரு நிகழ்விலும் நுாற்றுக்கும் அதிகமானோர் பலியாயினர்.இதனால், வங்கதேச ஆடைகள் துறை, சர்வதேச விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளது. இது, இந்திய ஆடை ஏற்றுமதியாளர் களின் வர்த்தக வாய்ப்பை அதிகரித்து உள்ளது.
Advertisement
மேலும் ஜவுளி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 26,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 26,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 26,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 26,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!