பதிவு செய்த நாள்
26 ஏப்2014
15:14
புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசூகி. இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான 4வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகரலாபம் 35 சதவீதம் சரிந்து ரூ.800 கோடியாக இருக்கிறது. கடந்தாண்டு இது ரூ.1,239.62 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர வருவாயும் 9.48 சதவீதம் சரிந்து ரூ.11,818.13 கோடியாக இருக்கிறது. கடந்தாண்டு இது ரூ.13,056.26 கோடியாக இருந்தது.
உற்பத்தி குறைந்தது, விற்பனைக்கான செலவு அதிகரித்தது, டீலர்களுக்கு சுங்கவரியில் சலுகை அளித்தது போன்ற காரணங்களால் மாருதி சுசூகியின் லாபம் சரிந்ததாக நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஓர் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இந்நிறுவனத்தின் லாபம் 15.53 சதவீதம் உயர்ந்து ரூ.2,852.92 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இது 2,469.28 கோடியாக இருந்தது. இதேப்போல் நிறுவனத்தின் ஆண்டுக்கான வருவாய் ரூ.43,215.83 கோடியிலிருந்து ரூ.43,271.78 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|