பதிவு செய்த நாள்
27 ஏப்2014
03:52
சென்னை;பொதுத் துறையைச் சேர்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், பொதுக் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், பிரீமியம் வசூல் வாயிலாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.சென்ற 2013–14ம் நிதியாண்டில், நிறுவனம், 527.60 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, முந்தைய நிதியாண்டில், 527.33 கோடி ரூபாயாக இருந்தது என, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மிலிந்த் கரத் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:சவாலான பொருளாதார சூழலிலும், நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் பிரீமியம் வசூல், 9,709 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் வசூலை விட, 443 கோடி ரூபாய் அதிகமாகும்.நடப்பு நிதியாண்டில், நிறுவனம், பிரீமியம் வசூல் வாயிலாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மிலிந்த் கரத் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|