பதிவு செய்த நாள்
27 ஏப்2014
03:53
புதுடில்லி:நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல், 15 தினங்களில், முன்பேர சந்தைகளில் வர்த்தகம், 70 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.36 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.கடந்தாண்டின் இதே காலத்தில், இந்த வர்த்தகம், 7.87 லட்சம் கோடி ரூபாயாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன்ஸ் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முன்பேர வர்த்தகம், 77 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3.84 லட்சம் கோடியிலிருந்து, 87,997 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதே போன்று, முன்பேர சந்தைகளில் எரிபொருட்கள் மீதான வர்த்தகமும், 71 சதவீதம் சரிவடைந்து, 1.85 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 54,647 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
மேலும், தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகமும், 64 சதவீதம் குறைந்து, 1.31 லட்சம் கோடியிலிருந்து, 47,234 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.இவை தவிர, வேளாண் பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகமும், 46 சதவீதம் சரிவடைந்து, 85,853 கோடியிலிருந்து, 46,760 கோடி ரூபாயாகக் குறைந்து உள்ளது.கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், முன்பேர சந்தைகளின் வர்த்தகம், ஒட்டு மொத்த அளவில், 41 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 170.46 லட்சம் கோடியிலிருந்து, 101.44 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, எப்.எம்.சி., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|