பதிவு செய்த நாள்
27 ஏப்2014
03:56
புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. இது, மேலும் வலுவடையும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து நிதி அமைச்சர் மேலும் கூறியதாவது:காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது.கடந்த 2012–13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8,800 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது. இது, 4.7 சதவீதமாகும்.இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்து, கடந்த நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 3,200 கோடி டாலராக குறைந்தது.
இது, 1.7 சதவீதமாகும்.அதே போன்று, நடப்பு நிதிஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை, 4.6 சதவீதமாக குறைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், மொத்த வரி வசூல், மறுமதிப்பீட்டு இலக்கை விட குறைந்திருந்த நிலையிலும், அரசின் செலவின குறைப்பால், நிதி பற்றாக்குறை, 4.6 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது.தற்போது பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி என்பது, தேர்தலுக்கு பிறகு, மத்தியில் நிலையான ஆட்சி ஏற்படும் என்ற கருத்தினால் தான். இது, ‘மோடி அலை’யால் ஏற்பட்ட எழுச்சி என்று கூறுவதற்கில்லை.இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு மாதத்தில், ஒரு சில வர்த்தக தினங்களில், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மந்தமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|