கம்ப்­யூட்டர் விற்­பனை சரிவுகம்ப்­யூட்டர் விற்­பனை சரிவு ... கச்சா எண்ணெய் உற்பத்தியில் மந்தம் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மந்தம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பரஸ்­பர நிதி நிறு­வ­னங்களின் வங்கி­ முத­லீடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2014
03:59

மும்பை:பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், சென்ற 2013–14ம் நிதி­யாண்டின் நான்­கா­வது காலாண்டில் (ஜன., – மார்ச்), வங்கி மற்றும் பொதுத் துறை நிறு­வனப் பங்கு­களில் அதிக அளவில் முத­லீடு செய்­து உள்­ளன.அதே சமயம், இதே காலத்தில், தகவல் தொழில்­நுட்பத் துறை நிறு­வனப் பங்­கு­களில் அவற்றின் முத­லீடு குறைந்­து உள்­ளது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யாமதிப்­பீட்டு காலத்தில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், பொதுத் துறை வங்­கி­யான ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யாவின் பங்கு­களில் செய்­துள்ள முத­லீடு, 1,911 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய காலாண்டை விட, 54.57 சதவீதம் அதி­க­மாகும்.இதே காலத்தில், எச்.டீ.எப்.சி. வங்கி பங்­கு­களில் மேற்­கொண்ட முத­லீடு, 21.06 சத­வீதம் அதி­க­ரித்து, 1,447 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கியில், மேற்­கொண்ட பங்கு முதலீடு, 10.65 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,048 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்­துள்­ளது. இதை தொடர்ந்து, பெடரல் பேங்க் (325 கோடி ரூபாய்), பஞ்சாப் நேஷனல் பேங்க் (278 கோடி ரூபாய்), இந்தஸ் இந்த் பேங்க் (259 கோடி ரூபாய்), பேங்க் ஆப் பரோடா (187 கோடி ரூபாய்), கோட்டக் மகிந்­திரா பேங்க் (169 கோடி ரூபாய்) ஆகிய வங்­கி­களில், பரஸ்­பர நிதி நிறுவனங்­களின் பங்கு முத­லீடு உயர்ந்­து உள்­ளது.வங்­கி­களை தொடர்ந்து, பொதுத் துறை நிறு­வனப் பங்­கு­க­ளிலும், பரஸ்பர நிதி நிறு­வ­னங்­களின் முத­லீடு அதி­க­ரித்­து உள்­ளது.
சென்ற நிதி­யாண்டின் நான்­கா­வது காலாண்டில், பொதுத் துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., நிறு­வன பங்­கு­களில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள் மேற்­கொண்ட முத­லீடு, முந்­தைய காலாண்டை விட, 61 சத­வீதம் அதி­க­ரித்து, 1,317 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.கெயில் இந்­தியாஇதே காலத்தில், பவர் பைனான்ஸ் கார்ப்­ப­ரேஷன் நிறு­வனப் பங்­கு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லீடு, 100 சதவீதம் உயர்ந்து, 790 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இந்த வகையில், பொதுத் துறையை சேர்ந்த கெயில் இந்­தியா (674 கோடி ரூபாய்), பீ.பி.சி.எல்., (664 கோடி ரூபாய்), பவர் கிரிட் கார்ப்­ப­ரேஷன் (616 கோடி), கோல் இந்­தியா (393 கோடி), கன்­டெய்னர் கார்ப்­ப­ரேஷன் ஆப் இந்­தியா (332 கோடி ரூபாய்), இந்­தியன் ஆயில் கார்ப்­ப­ரேஷன் (328 கோடி ரூபாய்), ஆயில் இந்­தியா (297 கோடி ரூபாய்) உள்­ளிட்ட நிறு­வ­னங்­க­ளிலும் பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­களின் முத­லீடு உயர்ந்­துள்­ளது.அதே சமயம், மதிப்­பீட்டு காலத்தில், தகவல் தொழில்­நுட்பத் துறை நிறு­வனப் பங்­கு­களில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­களின் முத­லீடு குறைந்­துள்­ளது.
ரூபாய் மதிப்பு:இன்­போசிஸ் நிறு­வ­னத்தில், இந்­நி­று­வ­னங்கள் மேற்­கொண்ட பங்கு முத­லீடு, 2,384 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. அதே போன்று, விப்ரோ நிறு­வ­னத்தில் மேற்­கொண்ட பங்கு முத­லீடும், 547 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.மதிப்­பீட்டு காலத்தில், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, 3 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. இதனால், தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களின் வருவாய் குறையும் என்ற மதிப்­பீட்டால் அவற்றின் பங்­கு­களில் முத­லீடு செய்வதை, பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள் குறைத்துக் கொண்­டுள்­ளன.அதே சமயம், மத்­தியில் புதிய அரசு அமைந்து, பொரு­ளா­தார வளர்ச்சி உயரும் என்ற எதிர்­பார்ப்பில், பொதுத் துறை நிறு­வன பங்­கு­களில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்­களின் முத­லீடு அதி­க­ரித்­து உள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)