பதிவு செய்த நாள்
27 ஏப்2014
03:59
மும்பை:பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற 2013–14ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜன., – மார்ச்), வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்து உள்ளன.அதே சமயம், இதே காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனப் பங்குகளில் அவற்றின் முதலீடு குறைந்து உள்ளது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாமதிப்பீட்டு காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பங்குகளில் செய்துள்ள முதலீடு, 1,911 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய காலாண்டை விட, 54.57 சதவீதம் அதிகமாகும்.இதே காலத்தில், எச்.டீ.எப்.சி. வங்கி பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 21.06 சதவீதம் அதிகரித்து, 1,447 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், மேற்கொண்ட பங்கு முதலீடு, 10.65 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,048 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து, பெடரல் பேங்க் (325 கோடி ரூபாய்), பஞ்சாப் நேஷனல் பேங்க் (278 கோடி ரூபாய்), இந்தஸ் இந்த் பேங்க் (259 கோடி ரூபாய்), பேங்க் ஆப் பரோடா (187 கோடி ரூபாய்), கோட்டக் மகிந்திரா பேங்க் (169 கோடி ரூபாய்) ஆகிய வங்கிகளில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு உயர்ந்து உள்ளது.வங்கிகளை தொடர்ந்து, பொதுத் துறை நிறுவனப் பங்குகளிலும், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து உள்ளது.
சென்ற நிதியாண்டின் நான்காவது காலாண்டில், பொதுத் துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., நிறுவன பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, முந்தைய காலாண்டை விட, 61 சதவீதம் அதிகரித்து, 1,317 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.கெயில் இந்தியாஇதே காலத்தில், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 100 சதவீதம் உயர்ந்து, 790 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்த வகையில், பொதுத் துறையை சேர்ந்த கெயில் இந்தியா (674 கோடி ரூபாய்), பீ.பி.சி.எல்., (664 கோடி ரூபாய்), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (616 கோடி), கோல் இந்தியா (393 கோடி), கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (332 கோடி ரூபாய்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (328 கோடி ரூபாய்), ஆயில் இந்தியா (297 கோடி ரூபாய்) உள்ளிட்ட நிறுவனங்களிலும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு உயர்ந்துள்ளது.அதே சமயம், மதிப்பீட்டு காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனப் பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு:இன்போசிஸ் நிறுவனத்தில், இந்நிறுவனங்கள் மேற்கொண்ட பங்கு முதலீடு, 2,384 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே போன்று, விப்ரோ நிறுவனத்தில் மேற்கொண்ட பங்கு முதலீடும், 547 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் குறையும் என்ற மதிப்பீட்டால் அவற்றின் பங்குகளில் முதலீடு செய்வதை, பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன.அதே சமயம், மத்தியில் புதிய அரசு அமைந்து, பொருளாதார வளர்ச்சி உயரும் என்ற எதிர்பார்ப்பில், பொதுத் துறை நிறுவன பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|