பதிவு செய்த நாள்
28 ஏப்2014
00:37
புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி,கடந்த ஆண்டு இதே மாத உற்பத்தியை விட,1.6சதவீதம் குறைந்து,317 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.
அதே சமயம்,இதே காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, 2.8 சதவீதம் உயர்ந்து, 1,947 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி,9.3 சதவீதம் சரிவடைந்து,288 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது.சென்ற முழு நிதியாண்டில், கச்சா எண்ணெய் உற்பத்தி, முந்தைய நிதியாண்டை விட, 0.2 சதவீதம் குறைந்து, 3,778 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
இதே காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, 1.6 சதவீதம் உயர்ந்து, 22,270 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 13 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3,540 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. சென்ற மார்ச் மாதம் மற்றும் முழு நிதியாண்டில், முறையே, 343 கோடி டன் மற்றும் 3,139 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதே காலத்தில்,சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி முறையே, 192 கோடி டன் மற்றும் 22,296 கோடி டன் என்ற அளவிலும், இயற்கை எரிவாயு உற்பத்தி முறையே, 301 கோடி கன மீட்டர் மற்றும், 3,845 கோடி கன மீட்டர் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|