பதிவு செய்த நாள்
28 ஏப்2014
00:51
மும்பை:வாடிக்கையாளர்களின், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்றவற்றில் நடைபெறும் பண மோசடியை தடுக்க, வங்கிகள், இருவகை ரகசிய குறியீட்டு அங்கீகார நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களின், கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து பணம் எடுப்பது; இணையதளம் வாயிலான, நெட் பேங்கிங்கில், ஒருவரின் கணக்கில் உள்ள பணத்தை, முறைகேடாக வேறு ஒரு கணக்கிற்கு மாற்றுவது உள்ளிட்ட மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
பாதுகாப்பு:இவற்றை தடுக்கும் நடைமுறைகள் குறித்த ஆய்வறிக்கையை, ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது. வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு, வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதில் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக, வங்கிகள்,ரகசிய குறியீடு சார்ந்த இருவகை அங்கீகார நடைமுறையை பின்பற்றுவதன் மூலம்,ஆன்-லைன் வங்கி பரிவர்த்தனையில் நடைபெறும் மோசடியை தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை, வங்கிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, முதலில் டிஜிட்டல் கையொப்பத்தின் சங்கேத குறியீட்டிலும், அடுத்து, வங்கியின் கேள்விக்கு வாடிக்கையாளர் அளிக்கும் பதிலின் அடிப்படையிலும் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்.
ஆய்வறிக்கை:இத்தகைய இருவகை ஆய்வுமுறையில், பணமோசடியை தடுக்க முடியும் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான வங்கிகள் குறுந்தகவல் வாயிலாக, ஒருமுறை ரகசிய குறியீடு வழங்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|