கச்சா எண்ணெய் உற்பத்தியில் மந்தம்கச்சா எண்ணெய் உற்பத்தியில் மந்தம் ... ஐ.சி.டி., பயன்பாட்டில்இந்தியா பின்னடைவு ஐ.சி.டி., பயன்பாட்டில்இந்தியா பின்னடைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆன்–லைன் வங்கி மோசடியை தடுக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
00:51

மும்பை:வாடிக்கையாளர்களின், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்றவற்றில் நடைபெறும் பண மோசடியை தடுக்க, வங்கிகள், இருவகை ரகசிய குறியீட்டு அங்கீகார நடைமுறையை பின்பற்ற வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களின், கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து பணம் எடுப்பது; இணையதளம் வாயிலான, நெட் பேங்கிங்கில், ஒருவரின் கணக்கில் உள்ள பணத்தை, முறைகேடாக வேறு ஒரு கணக்கிற்கு மாற்றுவது உள்ளிட்ட மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
பாதுகாப்பு:இவற்றை தடுக்கும் நடைமுறைகள் குறித்த ஆய்வறிக்கையை, ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது. வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு, வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதில் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக, வங்கிகள்,ரகசிய குறியீடு சார்ந்த இருவகை அங்கீகார நடைமுறையை பின்பற்றுவதன் மூலம்,ஆன்-லைன் வங்கி பரிவர்த்தனையில் நடைபெறும் மோசடியை தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை, வங்கிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, முதலில் டிஜிட்டல் கையொப்பத்தின் சங்கேத குறியீட்டிலும், அடுத்து, வங்கியின் கேள்விக்கு வாடிக்கையாளர் அளிக்கும் பதிலின் அடிப்படையிலும் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்.
ஆய்வறிக்கை:இத்தகைய இருவகை ஆய்வுமுறையில், பணமோசடியை தடுக்க முடியும் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான வங்கிகள் குறுந்தகவல் வாயிலாக, ஒருமுறை ரகசிய குறியீடு வழங்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)