பதிவு செய்த நாள்
28 ஏப்2014
00:54
நியூயார்க்:உலகளவில், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ஐ.சி.டி.,) பயன்படுத்துவதில், இந்தியா, 83வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா, சென்ற 2013ம் ஆண்டில், 68வது இடத்தில் இருந்தது.பொருளாதார வளர்ச்சிக்கான ஐ.சி.டி., பயன்பாடு குறித்து, உலக பொருளாதார கூட்டமைப்பு, 148 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையின் விவரம் வருமாறு:வளர்ந்த நாடுகள், அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்கு, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு தொழில்நுட்ப வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்கின்றன.
ஆனால், இத்துறையில், வளரும் நாடுகள் அவற்றின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கின்றன.இந்தியா, அதன் டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்த, அரசியல், கட்டுப்பாட்டு அமைப்புகள், வர்த்தக சூழல் ஆகியவை தடைக் கற்களாக உள்ளன.இத்தொழில்நுட்ப வசதிகளை முழுமையாக பயன் படுத்திக் கொண்டுள்ள முதல் 10 நாடுகளில், பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, சிங்கப்பூர்,சுவீடன்,நெதர்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து,அமெரிக்கா, ஹாங்காங், இங்கிலாந்து, கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. இதில்,இந்தியா 83வது இடத்திலும்,சீனா,82வது இடத்திலும் உள்ளன.இவ்வாறு,அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|