பதிவு செய்த நாள்
28 ஏப்2014
01:08
புதுடில்லி:சென்ற 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் முக்கிய, 12 துறைமுகங்கள், அனல் மின் நிலையங்களுக்கு இறக்குமதியான, 7.16 கோடி டன் நிலக்கரியை கையாண்டு சாதனை படைத்துள்ளன. இது, முந்தைய 2012–13ம் நிதியாண்டில், 5.86 கோடி டன்னாக இருந்தது.ஆக, சென்ற நிதிஆண்டில், இத்துறைமுகங்கள் கூடுதலாக, 22 சதவீத அளவிற்கு நிலக்கரியை கையாண்டு உள்ளன.
இதே காலத்தில், இந்த துறைமுகங்கள் கையாண்ட, உருக்கு தொழிற்சாலைகளுக்கான நிலக்கரி, 18.26 சதவீதம் அதிகரித்து, 1.80 கோடி டன்னில் இருந்து, 3.30 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது.சென்ற நிதியாண்டில், இத்துறைமுகங்கள் ஒட்டுமொத்தமாக, 10.50 கோடி டன் நிலக்கரியை (அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி,5.86 கோடிடன்; உயர் திறன் கொண்ட நிலக்கரி,2.80 கோடி டன்) கையாண்டு உள்ளன.இது, முந்தைய 2012–13ம் நிதியாண்டில், 8.70 கோடி டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|