பதிவு செய்த நாள்
28 ஏப்2014
01:11
புதுடில்லி:உலகளவில் உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது.கடந்த மார்ச் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 72.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது,கடந்தாண்டின் இதே மாதத்தில், 69.80 லட்சம் டன்னாக இருந்தது என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தி, 2.7 சதவீதம் என்ற அளவில் தான், வளர்ச்சி கண்டு இருந்தது.
அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி வளர்ச்சி,3.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துஇருந்தது.உலகளவில், கடந்த மார்ச் மாதத்தில்,உருக்கு உற்பத்தி,14.10 கோடி டன்னாக இருந்தது மதிப்பீட்டு மாதத்தில்,சீனா,7.03கோடி டன் உருக்கை உற்பத்தி செய்து உள்ளது.இது, உலகின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தியில்,50 சதவீதமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, இது, 2.2 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு மாதத்தில், ஜப்பானின் உருக்கு உற்பத்தி, 97 லட்சம் டன்னாகவும், தென்கொரியாவின் உருக்கு உற்பத்தி, 61 லட்சம் டன்னாகவும் இருந்தது.இதே மாதத்தில்,அமெரிக்காவின் உருக்கு உற்பத்தி,0.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 74லட்சம் டன்னாக இருந்தது.இதுதவிர,ஜெர்மனி(40 லட்சம் டன்), இத்தாலி (24 லட்சம் டன்),பிரான்ஸ்(14 லட்சம் டன்), ஸ்பெயின் (13 லட்சம் டன்) ஆகிய நாடுகளும், குறிப்பிடத்தக்க அளவிற்கு உருக்கை உற்பத்தி செய்து உள்ளதாக, உலக உருக்கு கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|