இந்தியா–தென் ஆப்ரிக்காவர்த்தகம் 760 கோடி டாலர்இந்தியா–தென் ஆப்ரிக்காவர்த்தகம் 760 கோடி டாலர் ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.60.65 இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.60.65 ...
கூடுதல் பங்கு மூலதன அறிவிப்பால் வங்கி துறை பங்குகள் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
01:31

நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, கூடுதலாக, 7,000 கோடி பங்கு மூலதனம் வழங்க இருப்பதாக செய்தி வெளியானது.இதையடுத்து, சென்ற வாரத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்த நிலையிலும், பல பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை அதிகரித்தது.
வசூலாகாத கடன்:பல பொதுத்துறை வங்கிகள், வசூலாகாத கடனுக்காக அதிக அளவில் தொகையை ஒதுக்க ேவண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந் நிலையில், பல பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை செயல்பாடும் திருப்திகரமாக இல்லை.இது போன்ற காரணங்களால், மத்திய அரசு, குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு, கூடுதல் பங்கு மூலதனம் அளிக்க உள்ளது.
நடப்பு 2014–15ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், வங்கி களுக்கு, 11,200 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது, புதிய அரசு, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, ஜூன் அல்லது ஜூலையில் அறிவிக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது,பொதுத் துறை வங்கிகளுக்கு, கூடுதலாக, 7,000 கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்கும் திட்டம் உள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்ற வெள்ளிஅன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் பங்கின் விலை, 3.91 சதவீதம் அதிகரித்து, 248.40 ரூபாய்க்கு விலை போனது.
அலகாபாத் பேங்க்:அதே போன்று, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் பங்கின் விலை, 3.33 சதவீதம் உயர்ந்து, 54.30 ரூபாய்க்கு கைமாறியது.இவை தவிர, அலகாபாத் பேங்க் (3.68 சதவீதம்/98.70 ரூபாய்), கனரா வங்கி (2.12 சதவீதம்/286.80 ரூபாய்), பேங்க் ஆப் இந்தியா (3.21 சதவீதம்/239.90 ரூபாய்), சிண்டிகேட் பேங்க் (1.23 சதவீதம்/102.70 ரூபாய்), யூனியன் பேங்க் ஆப் இந்தியா (2.35 சதவீதம்/152.70 ரூபாய்) ஆகிய வங்கிகளின் பங்குகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)