நிறுவனங்களின் செயல்பாட்டில் முன்னேற்றம்நிறுவனங்களின் செயல்பாட்டில் முன்னேற்றம் ... அன்னிய நேரடி முதலீடு 12 சதவீதம் வளர்ச்சி அன்னிய நேரடி முதலீடு 12 சதவீதம் வளர்ச்சி ...
பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து 33 லட்சம் முதலீட்டாளர்கள் ஓட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2014
01:47

புதுடில்லி:கடந்த 2013 - 14ம் நிதிஆண்டில், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து, 33 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதனால், பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கு ஆதாயம் கிடைக்காததால், பல முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து, நிகர அளவில், 88 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர்.

உள்நாட்டில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன. இவை முதலீட்டாளர்களுக்காக, பங்கு மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த பல்வேறு முதலீட்டு திட்டங்களை நிர்வகித்து வருகின்றன.கடந்த 2012-13ம் நிதியாண்டு நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்களில், 4.28 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர்.இந்த எண்ணிக்கை, சென்ற நிதியாண்டில், 3.95 கோடியாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2008-09ம் நிதியாண்டில், 4.75 கோடியாக இருந்தது.சென்ற பிப்ரவரி நிலவரப்படி, பரஸ்பர நிதி துறை நிறுவனங்கள், 1,538 முதலீட்டு திட்டங்களை கொண்டிருந்தன. இதில், 353 திட்டங்கள் பங்கு சார்ந்தவை; மீதமுள்ள, 1,089 திட்டங்கள் கடன் பத்திரங்கள் சார்ந்தவையாகும் என, 'செபி' அமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)