வர்த்தகம் » பொது
அன்னிய நேரடி முதலீடு 12 சதவீதம் வளர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஏப்2014
01:48
புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 12.29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 201 கோடி டாலராக (12,060 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது.
புள்ளிவிவரம்:இது, கடந்த நிதிஆண்டின் இதே மாதத்தில், 179 கோடி டாலராக (10,740 கோடி ரூபாய்) இருந்தது என, மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, 0.6 சதவீதம் குறைந்து, 2,076 கோடி டாலராக இருந்தது.
இது,முந்தைய 2012-13ம் நிதியாண்டின் இதே காலத்தில், 2,089 கோடி டாலராக இருந்தது.பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், சேவை துறை மிகவும் அதிகபட்சமாக, 218 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.இதையடுத்து, மோட்டார் வாகனம் (128 கோடி டாலர்), மருந்து (127 கோடி டாலர்) மற்றும் கட்டுமானம் (105 கோடி டாலர்) ஆகிய துறைகள் அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை கவர்ந்துள்ளன.
கணக்கீட்டு காலத்தில், மொரீஷியஸ் நாடு, இந்தியாவில் அதிகபட்சமாக, 448 கோடி டாலர் மதிப்பிற்கு நேரடி முதலீட்டை மேற்கொண்டுள்ளது.இதையடுத்து, சிங்கப்பூர் (391 கோடி டாலர்), இங்கிலாந்து (321 கோடி டாலர்),நெதர்லாந்து (220 கோடி டாலர்) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 1.5 சதவீதம் உயர்ந்து, 218 கோடி டாலராக வளர்ச்சி கண்டிருந்தது.இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, அன்னிய நிறுவனங்களின் முதலீடு அத்தியாவசியமாக உள்ளது. கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 4.5 சதவீதமாக மிகவும் சரிவடைந்திருந்தது.
ஐந்தாண்டு திட்டகாலம்நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), நாட்டின் அடிப்படை கட்டமைப்பு நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்காக, 1 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 29,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 29,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!