பதிவு செய்த நாள்
29 ஏப்2014
01:49
லண்டன்:இந்தியாவின் அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நான்கு வகையான காய்கறிகளை இறக்குமதி செய்ய, ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள, 28 நாடுகள் தடை விதித்துள்ளன.இந்த தடை, மே மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2013ம் ஆண்டில், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் இருந்தது.இதையடுத்தே, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய வேளாண் மற்றும் உற்பத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அல்போன்சா மாம்பழம் தவிர, பாகற்காய், புடலங்காய், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றின் இறக்குமதிக்கும், இந்த தடை பொருந்தும்.
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு, 1.60 கோடி மாம்பழங்களை இறக்குமதி செய்கின்றன; இதன் மதிப்பு, 60 லட்சம் பவுண்டாகும்.இந்த தடை குறித்த மறுபரிசீலனை, வரும் 2015ம் ஆண்டு டிசம்பர், 31ம் தேதி மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், இத்தடையால், ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி., கெய்த் வாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|