வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகத்தில் சுணக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஏப்2014
01:58
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று சுணக்கமாக இருந்தது. பல முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததையடுத்து, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' முறையே, 0.25 சதவீதம் மற்றும் 0.32 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தன.
உக்ரைன் நெருக்கடி மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வெளியிட உள்ள நிதி கொள்கை குறித்த எதிர்பார்ப்பு போன்றவற்றால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.எனினும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததை அடுத்து, அந்நாடுகளில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 56.46 புள்ளிகள் சரிவடைந்து, 22,631.61 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 22,721.36 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 22,597.19 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கெயில், பெல், ஹீரோ மோட்டோகார்ப், எச்.டீ.எப்.சி., கோல் இந்தியா உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சிப்லா, சன்பார்மா, விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 21.50 புள்ளிகள் குறைந்து, 6,761.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,786.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,750.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 29,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 29,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!