பதிவு செய்த நாள்
29 ஏப்2014
10:28
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின, இருப்பினும் சற்று நேரத்திலேயே மீண்டும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், (ஏப்ரல் 29ம் தேதி, காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 45.03 புள்ளிகள் உயர்ந்து 22,676.64 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 13.40 புள்ளிகள் உயர்ந்து 6,774.65 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்ததால் பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. இந்த ஏற்றம் சற்று நேரம் தான் நீடித்தது. உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழல், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் மீண்டும் சரிவை சந்தித்தன. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 116 புள்ளிகளும், நிப்டி 33 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|