பதிவு செய்த நாள்
30 ஏப்2014
00:02
புதுடில்லி:பிரபல மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான‘நோக்கியா’வின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த, ராஜீவ் சூரி நியமிக்கப்பட்டு உள்ளார்.பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக, இந்தியர்கள் நியமிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக, இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், பின்லாந்தில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ராஜீவ் சூரி, 46, நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன், நோக்கியா நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி நாதெல்லாவைப் போலவே, ராஜீவும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிப்பால் பல்கலையில்பொறியியல் பட்டம் பெற்றவர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|