பதிவு செய்த நாள்
02 மே2014
01:33
புதுடில்லி:டீசல் விலை உயர்த்தப்படாததால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், தற்போது, 6.80 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.டீசல் விற்பனையில் மாதம் ஒன்றுக்கு, 50 காசுகள் உயர்த்தும் வகையில், முன்பு முடிவு எடுக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக, இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படவில்லை.இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்ததாலும், சர்வதேச சந்தையில், எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், முதலில், ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், 5.49 ரூபாயாக இருந்த இழப்பு, தற்போது, 6.80 ரூபாயாக உயர்ந்துள்ளது என, எண்ணெய் நிறுவனங்களின் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|