பதிவு செய்த நாள்
02 மே2014
17:03
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக சரிவில் முடிந்தன. அந்நிய முதலீடு அதிகரிப்பால், இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கின. இருப்பினும் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததாலும், முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததாலும் மதியத்திற்கு மேல் பங்குசந்தைகள் சரிய தொடங்கி, இறுதியில் சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 13.91 புள்ளிகள் சரிந்து 22,403.89-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 1.60 புள்ளிகள் சரிந்து 6,694.80-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 16 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 14 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட ஆட்டோ நிறுவன பங்குகளும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்அண்ட்டி, வங்கி மற்றும் ஐடி தொடர்பான பங்குகளும் சரிவில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|