வர்த்­தக சிலிண்டர் விலை குறைப்புவர்த்­தக சிலிண்டர் விலை குறைப்பு ... லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் உயர்வு - அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது! லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் உயர்வு - அத்தியாவசிய பொருட்களின் விலை ... ...
அக்ஷய திருதி நன்நாளில், தமிழகத்தில் ஒரேநாளில் 1500 கிலோ தங்கம் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2014
10:44

அக்ஷய திருதியையை முன்னிட்டு, பொது மக்கள், நேற்று, ஆர்வமுடன், நகைக் கடைகளில், தங்க ஆபரணங்களை வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று, ஒரு நாளில் மட்டும், தமிழகத்தில், 1,500 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகி உள்ளது.
தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், நேற்று, அக் ஷய திருதியை கொண்டாடப்பட்டது. சில ஆண்டுகளாக, அக்?ஷய திருதியை அன்று, தங்கம் வாங்கும் பழக்கம், பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.மே தினத்தையொட்டி, நேற்று முன்தினம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை. இதனால், நேற்று, ஒரு நாள் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். எனவே, அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க, பெரும்பாலானோர், நேற்று, அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு, நகைக் கடைகளில் முகாமிட்டிருந்தனர்.
அக்ஷய திருதியைக்கு, தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக, சில நாட்களுக்கு முன், பொதுமக்கள், நகைக் கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி, முன்பதிவு செய்தனர்.முன்பதிவு செய்தவர்கள், நேற்று, நகைக் கடைகளுக்கு சென்று, முன்பதிவு ரசீதை கொடுத்து, தங்க ஆபரணங்களை வாங்கினர். பலர், தங்களிடம் உள்ள, பழைய நகைகளைக் கொடுத்து, கூடுதல் தொகை செலுத்தி, புதிய ஆபரணங்கள் வாங்கிச் சென்றனர்.
திருச்சி, கோவை, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி, புதுச்சேரி போன்ற நகரங்களைக் காட்டிலும், சென்னையில், ஆபரண தங்கத்திற்கு செய்கூலி, சேதாரம் குறைவாக உள்ளது.எனவே, மேற்கண்ட பகுதிகளில் இருந்து, குறிப்பாக, இலங்கையில்
இருந்தும், பலர், சென்னைக்கு வந்து, தங்கம் வாங்கிச் சென்றனர்.இதனால், சென்னையில், தங்கம் விற்பனைக்கு பெயர் பெற்ற, தி.நகர், பாரிமுனையில் உள்ள, பெரிய நகைக் கடைகளில் மட்டும் அல்லாமல், சிறிய நகை கடைகளிலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.அக்ஷய திருதியையை முன்னிட்டு, தமிழகத்தில், நேற்று ஒரு நாளில் மட்டும், 1,500 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது; இதன் மதிப்பு, 420 கோடி ரூபாய். இதில், சென்னையின் பங்களிப்பு, 90 சதவீதம்; அதாவது, 1,350 கிலோ.
இதுகுறித்து, ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறியதாவது :தமிழகத்தில், நாள்தோறும், பழைய மற்றும் புதிய தங்கம் விற்பனை, சராசரியாக, 1,000 கிலோ. 2013 அக்ஷய திருதியைக்கு, சென்னையில், 1,100 கிலோ உட்பட, தமிழகத்தில், 1,300 கிலோ தங்கம் விற்பனையானது.அக்ஷய திருதியைக்கு, தங்கம் விற்பனை, வழக்கத்தை விட,20 30 சதவீதம் அதிகம் இருக்கும். எதிர்பார்த்ததை போல, இந்த ஆண்டும், தங்கம் விற்பனை நன்கு இருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.

-நமது நிருபர்-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)