பதிவு செய்த நாள்
03 மே2014
11:07
சேலம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநிலத் தலைவர் நல்லதம்பி, கூறியதாவது: கடந்த, 2013 முதல், 2014 மார்ச் வரை, டீசல் விலை, லிட்டருக்கு, ஒன்பது ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை, 20 சதவீதம்; டயர் விலை, 16 சதவீதம்; உதிரி பாகங்கள் விலை, 10 சதவீதம்; சுங்க கட்டணம், 10 சதவீதம் என, உயர்ந்துள்ளது. ஆனால், 1 சதவீதம் கூட, லாரி வாடகை கட்டணத்தை உயர்த்தவில்லை. மேலும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, மழை இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளும் லாரி தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெரும்பாலான லாரிகள் லோடு இல்லாமல் நிற்கின்றன. இதனால், கடனுக்கு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு பணம் செலுத்த முடியாததால், 10 சதவீத லாரிகளை, நிதி நிறுவனங்கள் எடுத்துச்சென்று விட்டன. மீதமுள்ள, 50 சதவீதம் லாரிகளை முறையாக இயக்க வேண்டிய கட்டாயத்தில், 30 சதவீதம் லாரி வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளோம். இது, சரக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் சிறிய வகையான வாகனங்கள் முதல், லாரிகள் வரை, தமிழகத்தில் உள்ள, 5.25 லட்சம் வாகனங்களுக்கு பொருந்தும். இவ்வாறு, அவர் கூறினார்.
அரிசி, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும் இடத்தில் இருந்து, வாகனங்கள் மூலமே, சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது, லாரி வாடகை கட்டணம் உயர்வால், அவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|