பதிவு செய்த நாள்
04 மே2014
00:35
புதுடில்லி:நடப்பாண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், சர்வதேச, ‘டேப்லெட்’ கம்யூட்டர் விற்பனை, 5.04 கோடியாக அதிகரித்து உள்ளது.கடந்த 2013ம் ஆண்டின் இதே காலாண்டில், இந்த எண்ணிக்கை, 4.86 கோடியாக இருந்தது.தற்போது, அகன்ற திரையுடன், பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுட் கூடிய ஸ்மார்ட் போன்கள், அதிகளவில் சந்தைக்கு வரத் துவங்கியதை அடுத்து, ‘டேப்லெட்’ விற்பனை, மதிப்பீட்டு காலாண்டில், 3.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது என, ஐ.டீ.எப்.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் ‘டேப்லெட்’ விற்பனை, 1.95 கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து, 1.64 கோடியாக சரிவடைந்துள்ளது.இருப்பினும், இந்நிறுவனம், ‘டேப்லெட்’ விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|