பதிவு செய்த நாள்
04 மே2014
00:37
புதுடில்லி:தொலை தொடர்பு சேவை துறை நிறுவனங்களின் மொத்த வருவாய், சென்ற ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், 10.46 சதவீதம் வளர்ச்சி கண்டு, 58,385 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய 2012ம் ஆண்டின் இதே காலத்தில், 52,858 கோடி ரூபாயாக இருந்தது என, இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, ஒரு வாடிக்கையாளர் மூலமாக கிடைக்கும் சராசரி வருவாய், மதிப்பீட்டு காலாண்டில், 16.87 சதவீதம் அதிகரித்து, 99 ரூபாயிலிருந்து, 115.70 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்ற 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலத்தில், தொலை தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 91.50 கோடியாக உள்ளது.இதில், மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 88.63 கோடியாக (ஜி.எஸ்.எம்., 82.41 கோடி + சி.டீ.எம்.ஏ.,6.22 கோடி) உள்ளது என, ‘டிராய்’ மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|