பதிவு செய்த நாள்
04 மே2014
00:39
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 152 ரூபாய் உயர்ந்தது. அட்சய திருதியை முன்னிட்டு, குறைந்திருந்த தங்கம் விலை, நேற்று, திடீரென உயர்ந்து காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,800 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,950 ரூபாய்க்கும் விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 19 ரூபாய் உயர்ந்து, 2,819 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு, 152 ரூபாய் அதிகரித்து, 22,552 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 195 ரூபாய் உயர்ந்து, 30,145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 45.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 42,335 ரூபாய்க்கும் விற்பனைஆனது.கடந்த திங்களன்று (28ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,819 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,552 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆக, கடந்த வாரத்தில், தங்கம் விலை கிராமுக்கு, ஒரு ரூபாயும், சவரனுக்கு, எட்டு ரூபாயும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|