பதிவு செய்த நாள்
04 மே2014
00:41
கடந்த நான்கு ஆண்டு களில் இல்லாத வகை யில், சோயா எண்ணெய் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, இந்திய சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு (எஸ்.பி.ஏ.ஐ.,) தெரிவித்து உள்ளது.அரவைத்திறன்இந்திய ஆலைகளின் சோயா அரவைத் திறன், ஆண்டுக்கு, 2.25 கோடி டன்னாக உள்ளது.நடப்பு எண்ணெய் பருவத்தில் (அக்., – செப்.,) சென்ற மார்ச் வரையிலான காலத்தில், 5 லட்சம் டன் என்ற அளவிற்கே சோயா அரைக்கப்பட்டுள்ளது. இது, சென்ற பருவத்தின் இதே காலத்தில், ஒரு கோடி டன்னாக இருந்தது.
சோயா வரத்து குறைந்த தால், 10 சதவீத ஆலைகள் மட்டுமே, அரவைப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆலைகளும், அவற்றின் மொத்த உற்பத்தி திறனில், 25 – 30 சதவீத அளவிற்கே இயங்கி வருகின்றன என, எஸ்.பி.ஏ.ஐ., செய்தி தொடர்பாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.கடந்த ஆண்டு, மதிப்பீட்டு காலத்தில், 12 லட்சம் டன் சோயா உற்பத்தி ஆனது. இது, நடப்பாண்டு, இதே காலத் தில், 11 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.‘‘சந்தையில் சோயா வரத்து குறைந்ததால், 4 – 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அரவைப் பணிகள் சரிவடைந்துள்ளது,’’ என, ஜி.ஜி.படேல் அண்டு நிகில் ரிசர்ச் நிறுவனத்தின் நிர்வாக பங்கு தாரர் கோவிந்தபாய் படேல் தெரிவித்தார்.
இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா கூறியதாவது:இறக்குமதி:உள்நாட்டை விட, வெளிநாடுகளில், சோயா விலை குறைந்துள்ளது. இதனால், சோயா எண்ணெய் இறக்குமதி செய்வது லாபகரமாக உள்ளது. இதனால், சோயா அரவைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.நடப்பாண்டு துவக்கத்தில், ஒரு குவிண்டால் சோயா விலை, 18.6 சதவீதம் உயர்ந்து, 4,512 ரூபாயாக அதிகரித்து உள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|