பதிவு செய்த நாள்
05 மே2014
04:36
புதுடில்லி:சென்ற பிப்ரவரி மாதத்தில், உள்நாட்ட உற்பத்தி செய்யப்பட்ட கனிமங்களின் மதிப்பு, 18,118 கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நிலக்கரி:சென்ற பிப்ரவரியில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 0.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.18 கோடி டன் உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு, 6,372 கோடி ரூபாயாகும்.
மதிப்பீட்டு மாதத்தில், பழுப்பு நிலக்கரி உற்பத்தி, 5.2 சதவீதம் குறைந்து, 40 லட்சம் டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 519 கோடி ரூபாயாகும்.இதே மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 5 சதவீதம் குறைந்து, 267.50 கோடி கனமீட்டராக இருந்தது. இதன் மதிப்பு, 1,712 கோடி ரூபாயாகும்.கச்சா எண்ணெய் உற்பத்தி, 1.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 29 லட்சம் டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 5,354 கோடி ரூபாயாகும்.
மதிப்பீட்டு மாதத்தில், இரும்புத்தாது உற்பத்தி, 27.9 சதவீதம் அதிகரித்து, 1.30 கோடி டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 2,762 கோடி ரூபாய்.பாக்சைட்சுண்ணாம்புக்கல் உற்பத்தி, 2.5 சதவீதம் சரிவடைந்து, 2.31 கோடி டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 386 கோடி ரூபாய்.
மேற்கண்டவை தவிர, பாக்சைட் (16.60 லட்சம் டன்), குரோமைட் (3.21 லட்சம் டன்), மாங்கனீ (2.42 லட்சம் டன்), டோலமைட் (5.93 லட்சம் டன்) ஆகிய கனிமங்களின் உற்பத்தியும், குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|