பதிவு செய்த நாள்
05 மே2014
04:37
புதுடில்லி:கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், இந்தியாவில் உள்ள, 12 முக்கிய துறைமுகங்கள், 55.55 கோடி டன் சர கையாண்டு உள்ளன.இது, முந்தைய 2012 – 13ம் நிதியாண்டில், கையாண்ட சரக்கை (54.57 கோடி டன்) விட 1.78 சதவீதம் அதிகம் என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த நிதியாண்டு, மிக அதிகமாக சரக்குகளை கையாண்டதில், கன்ட்லா துறைமுகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இத்துறைமுகம், 8.70 கோடி டன் சரக்கை கையாண்டு உள்ளது.இந்த வரிசையில், அடுத்த இடங்களை, பரதீப் துறைமுகம் (6.8 கோடி டன்), ஜவஹர்லால் நேரு துறைமுகம் (6.3 கோடி டன்) ஆகியவை பிடித்துள்ளன.
பொது காப்பீட்டு நிறுவனங்களின்பிரீமியம் வருவாய் உயர்ந்தது
மும்பை:சென்ற 2013–14ம் நிதியாண்டில், பொது காப்பீட்டு துறை நிறுவனங்களின் பிரீமியம் வருவாய், 12.23 சதவீதம் உயர்ந்து, 77,538 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2012–13ம் நிதியாண்டில், 69,088 கோடி ரூபாயாக இருந்தது.
சென்ற நிதியாண்டில், தனியார் துறை சேர்ந்த, பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய், 15.37 சதவீதம் உயர்ந்து, 29,683 கோடியில் இருந்து, 34,246 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், பொது துறையை சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய், 9.86 சதவீதம் அதிகரித்து, 39,405 கோடியில் இருந்து, 43,292 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்திய பொது காப்பீட்டு துறையில், பொது துறையை சேர்ந்த, 4 நிறுவனங்களும், தனியார் துறையை சேர்ந்த, 24 நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|