பதிவு செய்த நாள்
05 மே2014
04:38
புதுடில்லி:மத்திய அரசு, சமையல் எண்ணெய்க்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, குறைத்துள்ளது.'பிராண்டு' பெயரில், அதிகபட்சமாக, 5 கிலோ கொண்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கோடு, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு டன் சமையல் எண்ணெய்யின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, 1,400 டாலரில் (84,000 ரூபாய்) இருந்து, 1,100 டாலராக (66,000 ரூபாய்) குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.
இந்த நிலையிலும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று, சிறிய அளவில், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், உள்நாட்டில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அதன் விலை உயர்வை தடுக்கும் , கடந்த 2008ம் ஆண்டு, 'பிராண்டு' அல்லாத சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.இந்தியா, ஆண்டுக்கு, சராசரியாக, 90 லட்சம் டன் சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|