சரக்கு கையாள்வதில்துறைமுகங்கள் சாதனைசரக்கு கையாள்வதில்துறைமுகங்கள் சாதனை ... முக்கிய நகரங்களில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் முக்கிய நகரங்களில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ...
வர்த்தகம் » ஜவுளி
சர்வதேச நாடுகளின் தேவையால்...பருத்தி நுாலிழை ஏற்றுமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2014
04:41

புதுடில்லி:சென்ற 2013 – 14ம் நிதியாண்டின், நான்காவது காலாண்டில் (ஜன., – மார்ச்), நுகர்பொருள் நிறுவனப் பங்குகளில் மேற்கொண்டிருந்த பங்கு முதலீட்டை, அன்னிய நிதி நிறுவனங்கள் குறைத்துக் கொண்டன. அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள், நுகர்பொருள் நிறுவன பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.மதிப்பீட்டு காலத்தில், நுகர்பொருள் துறையைச்சேர்ந்த, 16 நிறுவனங்களில், கோல்கேட், தாபர், இமாமி உள்ளிட்ட, 11 நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு குறைந்துள்ளது. நான்கு நிறுவனங்களில் அதிகரித்துள்ளது.ஐ.டி.சி., நிறுவனத்தின் பங்கு முதலீட்டில், மாறுதல் ஏதும் இல்லை.பொதுவாக, ஓராண்டில் முன்பதிவு செய்து கொள்ளும் அளவிற்கே, பருத்தி நுாலிழை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது.நம்நாட்டிற்கு, போட்டி நாடாக உள்ள சீனா, தற்போது அதிகம் தொழிலாளர்கள் சார்ந்த தொழில் உற்பத்தியை குறைத்து கொண்டு வருகிறது.
குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பங்களிப்பை சீனா குறைத்து கொண்டுள்ளது. இது, இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது.மேலும் சீன நிறுவனங்கள், கடன் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் சிக்குண்டுள்ளன.இந்நிலையில், கடந்த நிதிஆண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்ததும், இந்திய பருத்தி நுாலிழை ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக இருந்தது.குறிப்பாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 68.81 ஆக மிகவும் சரிவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு:ஆனால், அதனுடன் ஒப்பிடும் போது, தற்போது, ரூபாய் மதிப்பு, 12.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, இந்திய பருத்தி நுாலிழை ஏற்றுமதியாளர்களுக்கு இடர்பாடு அளிக்க கூடிய அம்சமாக உள்ளது. என்றாலும், சர்வதேச சந்தையில், பருத்தி நுாலிழை, துணி வகைகள், ஆடைகள் போன்றவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது.
ஜவுளி ஏற்றுமதி:இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டில், பருத்தி துணி ஏற்றுமதி, முந்தைய நிதிஆண்டை விட, 20 சதவீதமும், கைத்தறி துணி, 13 சதவீதமும், ஒட்டு மொத்த ஜவுளி ஏற்றுமதி, 15.4 சதவீதமும் அதிகரித்துள்ளன என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், உள்நாட்டில், கச்சா பருத்தி உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. இதன, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஜவுளி துறை நிறுவனங்களின் லாபம் கடந்த நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், முந்தைய நிதிஆண்டின் இதே காலத்தை விட, 33 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில், ஒரு கிலோ கச்சா பருத்தியின் சராசரி விலை, 99.45 ரூபாயாக இருந்தது.
இது, ஆகஸ்ட் மாதத்தில், 122.49 ரூபாயாக அதிகரித்து, பின், நவம்பர் மாதத்தில், 108.66 ரூபாயாக குறைந்தது. ஆனால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இதன் விலை, 116 ரூபாயாக உயர்ந்தது.
கச்சா பருத்தி:இதே காலத்தில், ஒரு கிலோ பருத்தி சராசரி விலை, முதலில், 214.19 ரூபாயாக இருந்தது. இது, நவம்பர் மாதத்தில், 203.35 ஆக சரிவடைந்து, பிப்ரவரி மாதத்தில், 214.08 ஆக அதிகரித்திருந்தது.சர்வதேச பொருளாதார மந்த நிலையால், ஜவுளி ஏற்றுமதியாளர்களால், கச்சா பருத்தி மற்றும் நுாலிழை விலை உயர்வு முழுவதையும், இறக்குமதி நிறுவனங்கள் மீது சுமத்த முடியாமல் போனது. இது, இந்திய ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)