சரக்கு கையாள்வதில்துறைமுகங்கள் சாதனைசரக்கு கையாள்வதில்துறைமுகங்கள் சாதனை ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.21 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.21 ...
முக்கிய நகரங்களில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2014
04:42

புதுடில்லி:அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவின் முக்கிய நகரங்களில், 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, சர்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, சி.பீ., ரிச்சர்ட் எல்லிஸ் மதிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம் வருமாறு:இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள்,அவற்றின் அலுவலகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளன. வரும், 2015ம் ஆண்டில், 708 கோடி சதுர அடி பரப்பளவிலான, புதிய வர்த்தக அலுவலக இடங்கள், பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் பெரும்பான்மை இடங்களை, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்.பெங்களூரு, புதுடில்லி தலைநகர் பிராந்தியம் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் பெரும்பான்மையான அலுவலக இடங்கள் அமையும்.
மொத்தம் உருவாக உள்ள அலுவலக இடங்களில், 60 – 65 சதவீதம் பயன்பாட்டிற்கு வந்தால் கூட, அடுத்த இரண்டு ஆண்டுகளில், புதிதாக, 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.அலுவலக பயன்பாட்டில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு அடுத்தபடியாக, வங்கி, நிதி, காப்பீடு ஆகிய துறைகளை சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கும்..
இவற்றையடுத்து, ஆய்வு மற்றும் ஆலோசனை, மருந்து, பொறியியல், தயாரிப்பு மற்றும் தொலை தொடர்பு துறை சார்ந்த நிறுவனங்கள் இருக்கும்.பன்னாட்டு நிறுவனங்கள், பெருநகரங்களை அடுத்து நகரங்கள் மற்றும் புறநகரங்களை குறிவைத்து, அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்க செய்யும்.
இத்துடன் மத்தியில் ஸ்திரமான அரசு அமையும் பட்சத்தில், இந்தியாவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)