பதிவு செய்த நாள்
05 மே2014
17:36
மும்பை : கடந்தவாரம் முழுக்க சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள், வாரத்தின் முதல்நாளான இன்று(மே 5ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. வர்த்தகதுவக்கத்தில் பங்குசந்தைகள் சரிந்து இருந்தபோதும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை உயர்ந்ததால் சரிவில் இருந்த பங்குசந்தைகள் மீண்டன. இன்றைய வர்த்தகநரே முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 41.23 புள்ளிகள் உயர்ந்து 22,445.12-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 4.55 புள்ளிகள் உயர்ந்து 6,699.35-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 13 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 1.82 சதவீதமும், ஓஎன்ஜிசி., பங்குகள் 1.93 சதவீதமும், ஐடிசி., பங்குகள் 1.22 சதவீதமும் உயர்ந்து இருந்தன. இதுதவிர வங்கி தொடர்பான பங்குகள் விலை 0.40 சதவீதம் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|