பதிவு செய்த நாள்
07 மே2014
00:17
புதுடில்லி:10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களும், சுயமாக வங்கியில் சேமிப்பு கணக்கை துவங்கும் வகையில், ரிசர்வ் வங்கி, விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தற்போது, 18 வயதிற்குட்பட்டோர், தாயை காப்பாளராக கொண்டு, வங்கியில் சேமிப்பு மற்றும் குறித்த கால வைப்பு கணக்கை துவங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.இனி, 10 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும், தாய் அல்லது சட்டபூர்வ காப்பாளர் துணையின்றி, வங்கியில் அனைத்து விதமான கணக்குகளையும் துவக்கலாம். அவர்களுக்கு வங்கி காசோலைகள், ஏ.டி.எம்., கார்டுகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
அதே சமயம், வங்கிகள், இடர்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், சிறுவர்களின் டெபாசிட் தொகை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.அத்துடன், சிறுவர்கள், சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து முடிவு எடுக்கவும் வங்கிகளுக்கு உரிமையுண்டு.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிச் சேவையை பரவலாக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என, வங்கியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|