பதிவு செய்த நாள்
07 மே2014
00:39
புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், ஆன்–லைன் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டோர் எண்ணிக்கை, 1.40 கோடியாக அதிகரித்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 36.30 லட்சமாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், ஆன்–லைன் மூலம் ரயில்வே டிக்கெட் பதிவு செய்து கொண்டோர் எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, 286 சதவீதம் அதாவது, மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய இணையதள மற்றும் மொபைல் கூட்டமைப்பு (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.
ஆன்–லைன் வாயிலான ரயில்வே டிக்கெட் முன்பதிவு சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ள நிலையில், விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது சரிவடைந்துள்ளது.சென்ற மார்ச் மாதத்தில், ஆன்–லைன் மூலம் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்டோர் எண்ணிக்கை, 13.10 லட்சமாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 14 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது என, இந்த கூட்டமைப்பின் தலைவர் சுபோ ராய் தெரிவித்தார்.
டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி, ஆன்–லைன் மூலம் பிராண்டட் ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதும் அதிகரித்து உள்ளது.சென்ற மார்ச் மாதத்தில் மட்டும், பிராண்டட் ஆடைகளை வாங்குவதற்காக, 1.61 கோடி பேர், பல்வேறு நிறுவனங்களின் வலைதளங்களை பார்வையிட்டுள்ளனர்.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் பார்வையிட்டோர் எண்ணிக்கையை (63.40 லட்சம்) விட, 154 சதவீதம் அதிகமாகும்.இதே போன்று, காலணிகள் வாங்குவதற்காக வலைதளத்தை பார்வையிட்டோர் எண்ணிக்கையும், 63 லட்சத்திலிருந்து, 1.55 கோடியாக உயர்ந்துள்ளது என, ராய் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|