பேனா­சோனிக்குக்கர் அறி­முகம்பேனா­சோனிக்குக்கர் அறி­முகம் ... தங்கம் விலை ரூ.16 குறைந்து தங்கம் விலை ரூ.16 குறைந்து ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளி­யீ­டுகள் மூலம் திரட்­டியதொகை ரூ.1,205 கோடி­யாக வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2014
00:01

புதிய பங்கு வெளி­யீ­டுகள் வாயி­லாக திரட்­டிய தொகை, கடந்த ஒரு சில நிதி­யாண்­டு­க­ளாக சரி­வ­டைந்து வரு­கி­றது.இதற்கு எடுத்­துக்­காட்­டாக, கடந்த 2013–14ம் நிதி­யாண்டில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் வாயி­லாக திரட்­டிய தொகை, கடந்த 10 ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, 1,205 கோடி ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது என, பிரைம் டேட்­டாபேஸ் நிறு­வ­னத்தின் புள்­ளி­வி­வ­ரத்தின் வாயி­லாக தெரி­ய­வந்­துள்­ளது.பாதிப்பு:சர்­வ­தேச அளவில் ஏற்­பட்ட பொரு­ளா­தார மந்த நிலையால், இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்­சியும் பாதிப்­புக்­குள்­ளா­னது.
இதனால், நாட்டின் பங்கு வர்த்­தகம் ஒட்டு மொத்த அளவில் அதிக ஏற்ற, இறக்­கத்­துடன் இருந்­தது. இதுவும், புதிய பங்கு வெளி­யீ­டு­களின் எண்­ணிக்கை மற்றும் திரட்­டப்­பட்ட தொகை குறை­விற்கு காரணம் என, பங்குச் சந்தை ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.இதற்கு முன்­பாக, அதா­வது, கடந்த 2002–03ம் நிதி­யாண்டில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம் திரட்­டப்­பட்ட தொகை, 1,039 கோடி ரூபா­யாக குறைந்து காணப்­பட்­டது.
இது, அதற்கு அடுத்த 2003–04ம் நிதி­யாண்டில், 3,191 கோடி­யா­கவும், 2004–05ம் ஆண்டில், 14,662 கோடி ரூபா­யா­கவும் அதி­க­ரித்­தது.அதன்பின், புதிய பங்கு வெளி­யீ­டுகள் வாயி­லாக திரட்­டப்­பட்ட தொகை, ஓர­ள­விற்கு உயர்ந்து வந்­தது.இந்­நி­லையில், கடந்த 2007–08ம் ஆண்டில், புதிய பங்கு வெளி­யீ­டுகள்வாயி­லாக திரட்­டப்­பட்ட தொகை, வர­லாறு காணாத அள­விற்கு, 41,323 கோடி ரூபா­யாக மிகவும் அதி­க­ரித்­தி­ருந்­தது.
அதே­ச­மயம்,அமெ­ரிக்­காவில் ஏற்­பட்ட கடும் பொரு­ளா­தார வீழ்ச்­சியால்,2008–09ம் நிதி­யாண்டில், உள்­நாட்டில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் வாயி­லாக திரட்­டப்­பட்ட தொகை, 2,034 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­தது.இருப்­பினும், அதற்கு அடுத்த, 2009–10ம் நிதி­யாண்டில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் வாயி­லாக திரட்­டப்­பட்ட தொகை, 24,948 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தது.
புள்ளிவிவரம்:இது, அதற்கு அடுத்த, 2010–11ம் நிதி­யாண்டில், 33,098 கோடி­யாக மேலும் அதி­க­ரித்­தது.ஆனால், அதற்கு பிறகு, 2011–12ம் நிதி­யாண்டில், இத்­தொகை, 5,893 கோடி­யா­க வும், 2012–13ம் நிதி­யாண்டில், 6,497 கோடி ரூபா­யா­கவும் இருந்­தது.இவ்­வாறு, பிரைம் டேட்­டா பேஸ் நிறு­வ­னத்தின் புள்­ளி­வி­வ­ரத்தின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)